Logo

articles archives

previous

next

tamil articles   

   

காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா?

 

நவீன காலத்தில் நடக்கும் திருமணங்கள் உண்மையில் பந்தம் நிலைக்கவா நடக்கிறது? என்று நினைக்கத்தோணுகிறது. ஒவ்வொருவர் மனதிலும் திருமணம் பற்றி ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நல்லது.

தற்போது காதல் திருமணம் அழகையே சார்ந்திருக்கிறது. காதலிக்கும் போது வெட்கம் போன்ற கவசங்களால் மறைக்கப்படும் பலவீனங்கள் கல்யாணத்தின் பின் வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாட்டை சற்றும் எதிர்பார்க்காத கணவன் அல்லது மனைவிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால் வாழ்க்கையில் பிரச்சனை தோற்றுவிக்கப்படுகிறது.

காதலர்களே! காதலிக்கும் போதே பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து காதலிப்பது வாழ்க்கைக்கு நல்லது. நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் என்று எடுத்தால் ஒரு 25 வயது பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படும் போது

1) ம‌த‌ம்
2) ஜாதி
3) பிரிவு
4) உட்பிரிவு
5) ஜாத‌க‌ம்(தோஷ‌ பொருத்த‌ம் வேறு இதில்!!!)
6) ப‌டிப்பு
7) அன்த‌ஸ்து
8 ) குடும்ப‌ம்
9) குண‌ம்
10) ப‌ண‌ம்
11) அழ‌கு
12) வேலை

என்ற பெற்றோரின் பல எதிர்பார்ப்புக்கள். இவ்வளவு எதிர்பார்ப்பையும் தாண்டி ஒரு வரன். முன்பின் தெரியாத ஒருவரை நிச்சயதார்த்தத்தில் காதலிக்க தொடங்கும் போது காதலிக்க தொடங்கும் கல்யாணம் செய்யப்போகு நபரின் எதிர்பார்ப்புக்கள், கனவுகள் அனைத்தும் நிறைவேறாத பட்சத்தில் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள்???....

அம்மி கொடுத்த காலம் மாறி மிக்ஸி கொடுக்கும் பெற்றோர்களே!உங்கள் பிள்ளைகளின் திருமணங்களை எளிய முறையில் நடக்க வேண்டும். அதாவது, உங்களுக்கும் கஸ்ரம் இல்லாமல் பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் கஸ்ரத்தை கொடுக்காமல் கல்யாணம் நடக்க வேண்டும். அதற்கு இரண்டு மனங்கள் ஒன்று பட்டு கல்யாணம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பெற்றோர்களே! திருமணம் செய்த தம்பதியினரே!இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

Thanks - Webdunia.com